Follow on

TAMIL LITERATURE

Information provided by Ms.Philomena,  (B.A Hons, B.Ed)

சங்கம் மருவிய காலம் 
நீதி இலக்கியம் 
பதினென் கணக்கு நூல்கள் 
 

திருக்குறள் 
குறள் வெண்பாவால் இரண்டு அடிகளில், முதல் அடியில் 4 சீர்களும் இரண்டாம் அடியில் 3 சீர்களும் அமைத்துப் பாடுவது குறள். 
இயற்றியவர் - திருவள்ளுவர் 
அறத்துப்பால் - 38 அதிகாரங்கள் 
பொருட்பால் - 70 அதிகாரங்கள் 
இன்பத்துப் பால் - 25 அதிகாரங்கள் 
1330 பாடல்களைக் கொண்டது.

நாலடியார் 
நாங்கு அடிகளை உடையது. 
சமண முனிவர்கள் 400 பேர் எழுதிய பாடல்கள் 
காலம் - 7ஆம் நூற்றாண்டு 
அறம் - 13 அதிகாரங்கள் 
பொருள் - 24 அதிகாரங்கள் 
இன்பம் - 3 அதிகாரங்கள் 
மொத்தம் - 40 அதிகாரங்கள் 
நிலையாமையைப் பற்றிய பாடல்கள் மிகுதி. டாக்டர் ஜி.யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

நான்மணிக்கடிகை 
நாங்கு நவமனிகளாக ஆன மாலை. 
ஆசிரியர் - விளம்பி நாகனார் 
மணியான கருத்துக்களைக் கொண்ட பாடல்கள். 
 

கார் நாற்பது 
கார் காலம் பற்றிய 40 பாடல்களைக் கொண்ட நூல். 
தலைவன், தலைவி, தோழி, பாங்கன் ஆகியோரை வைத்து ஒரு நாடகம் போல் அமைந்த நூல். 
ஆசிரியர் - மதுரை கண்ணங்கூத்தனார் 
 

களவழி நாற்பது 
போர்க்களத்தின் நிலையைக் கூறும் நூல். 40 பாடல்களை உடையது. இது புறத்திணை நூல். 
ஆசிரியர் - பொய்கையார் 
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் 12 நூல்கள் நீதி நூல்கள். 
 

இனியவை நாற்பது 
இனிய கருத்துக்களை கூறும் 40 வெண்பாக்களை உடையது. 
ஆசிரியர் - பூதஞ்சேந்தனார் 
 

இன்னா நாற்பது 
தீயன தரும் நாற்பது என்பது பொருள். துன்பத்தைத் தருவன என்று கூறும் பாடல்களை கொண்டது. 
41 பாடல்களையுடையது 
ஆசிரியர் - கபிலர். இக்கபிலர் சங்க கால கபிலர் அல்லர். 
கள்ளுண்ணாமை, புலால் உண்ணாமையை வற்புறுத்திக் கூறியுள்ளார். 
4ஆம் நூற்றாண்டினர் என்பது பொது கருத்து. 
 

ஐந்திணை ஐம்பது 
ஐந்து நில ஒழுக்கங்களுக்கும் பத்து பத்து பாடல்களாக 50 பாடல்களை உடையது. இந்நூல் முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற முறையில் பாடப்பெற்றது. 
ஆசிரியர் - மாறன் பொறையனார் 
 

ஐந்திணை எழுபது 
ஐந்து நில ஒழுக்கங்களையும் பாடிய 70 பாடல்கள் கொண்ட நூல். குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற முறையில் ஒவ்வொரு நிலத்திற்கும் 14 பாடல்கள் உள்ளன. 
4 பாடல்கள் கிடைக்கவில்லை. 
ஆசிரியர் - மூவாதியார் (ஐந்தாம் நூற்றாண்டு) 
 

திணை மொழி ஐம்பது 
அகத்திணைப் பற்றிக் கூறும் 50 பாடல்கள். 
குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற முறையில் அமைந்துள்ளது. 
ஆசிரியர் - கண்ணஞ்ச்சேந்தனார் 
 

திணை மாலை நூற்றைம்பது 
அகத்திணைப் பற்றி மாலையாக பாடிய 150 பாடல்களைக் கொண்டது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து நிலம் பற்றி அந்நிலத்திற்குறிய புணர்தல், பிரிதல் முதலிய ஒழுக்கங்கள் பாடப் பெற்றது. 
153 பாடல்கள் உள்ளன. 
ஆசிரியர் - கணிமேதாவியார் (ஏலாதியின் ஆசிரியரும் இவரே) 
 

கைந்நிலை 
கை என்பது அகத்திணை ஒழுக்கத்தை குறிக்கும் சொல். 
திணைக்கு 12 பாடல்களாக 60 பாடல்களைக் கொண்டது. நூல் முழுதும் கிடைக்கவில்லை. 
ஆசிரியர் - புல்லங்க்காடனார். 
 

திரிகடுகம் 
சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் அரைத்து கடுகு போல் அமைந்த மருந்திற்கு திரிகடுகம் என்று பெயர். உடல் வளர்ச்சிக்கு இம்மருந்து உதவுவது போல உள்ள வளர்ச்சிக்கு இந்நூல் உதவும். 3 கருத்துக்களை ஒவ்வொரு பாடலிலும் கூறுவதால் திரிகடுகம் என்ற பெயரைப் பெற்றது. 
101 வென்பாக்களை உடையது 
ஆசிரியர் - நல் ஆதனார். 
 

ஆசாரக்கோவை 
ஒழுக்கம், வாழும் ஒழுக்க விதிகளைக் கூறும் நூல். 
100 வெண்பாக்களை உடையது. 
ஆசிரியர் - கயத்தூர் பெருவாயில் முள்ளியார் 
 

பழமொழி நானூறு 
பழமையான சொல். ஒவ்வொரு பாடலும் பழமொழியால் முடிக்கப்பட்டுள்ளது. முது மொழி என்ற பெயரும் உண்டு. 
ஆசிரியர் - முன்றுறை அரையனார் 
 

சிறு பஞ்சமூலம் 
சிறிய ஐந்து வேர்கள். 
சிறிய வழுதுணை, நெருஞ்சி, சிறுமல்லி, பெருமல்லி, கண்டங்கத்திரி இவற்றின் வேர்களால் ஆன மருந்து. ஒவ்வொரு பாடலிலும் 5 கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. 
102 பாடல்கள். 
ஆசிரியர் - காரியாசான் சமணர். 
 

முதுமொழிக் காஞ்சி 
பழமொழி என்பது பொருள். காஞ்சி, பெண்கள் இடையில் அணியும் ஒரு அணிவகை. பல கருத்துக்களை கூறும் நூல். 
100 குறள் வெண் செந்துறைப் பாக்களாக கொண்டது. 
ஆசிரியர் - மதுரை கூடலூர் கிழார் 
5ஆம் நூற்றாண்டினர் 
 

ஏலாதி 
ஏலக்காய் போன்ற 6 பொருட்களைக் கொண்டு மருந்து தயாரிக்கப் படுகிறது. ஏலம், இலவங்கம், சிறு நாவல்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு, இந்த பொருட்களை இடித்து சூரணம் செய்வர். உடல் நோயைப் போக்கும் ஏலாதி மருந்தைப் போல உள்ள நோயைப் போக்க வல்லது. ஒவ்வொரு பாடலிலும் 6 உண்மைகள் கூறப்பட்டுள்ளது. 
81 பாடல்கள் 
ஆசிரியர் - கணி மேதாவியார் 
 

இன்னிலை 
பதினெண்கீழ்க்கணக்கு வெண்பாவில் இன்னிலை, கை நிலை என்பதையும் சேர்க்கும் போது 19 நூல்களாகின்றன. 
அறம் - 10, பொருள் - 9, இன்பம் - 12, வீட்டுப்பால் - 14, இல்லியல் - 8, துறவியல் - 6 என அமைக்கப்பட்டுள்ளது. 
ஆசிரியர் - பொய்கையார்

For details visit tamilvu.org/library/... ( under Noolgal Thamizh)