Follow on

TAMIL LITERATURE

Information provided by Ms.Philomena,  (B.A Hons, B.Ed)

சங்க இலக்கியம் 

எட்டுத் தொகை, பத்துப் பாட்டு

எட்டுத் தொகை - நற்றினை, குறுந்தொகை, ஐங்குறு நூறு, கலித்தொகை, அகநானூறு, பதிற்றுப் பத்து, புறநானூறு, பரிபாடல்

1. நற்றிணை - நல் + திணை 
நல்லொழுக்கத்தை கூறும் நூல். 275 புலவர்களால் பாடப் பெற்றது. 9 அடி முதல் 12 அடிவரை உள்ள பாடல்களைக் கொண்டது. நற்கருத்துக்களின் தொகுப்பு நற்றிணை.

2.குறுந்தொகை 
குறுகிய அடிகளையுடைய பாடல்களால் தொகுக்கப்பட்ட நூல் - மிகுதியானது 8 அடிகள். 
பாடல்கள் - 402 
பாடிய புலவர்கள் - 205

3. ஐங்குறு நூறு 
500 பாடல்களையுடைய நூல். 
3 அடி முதல் 6 அடிவரை உள்ள பாடல்களை உடையது. ஒவ்வொரு திணைக்கும் 100 பாடல்களாக 5 திணைகளுக்கும் 500 பாடல்களைக் கொண்டது. 
மருதத் திணை - ஓரம்போகியார் பாடியது 
நெய்தல் திணை - அம்மூவனார் பாடியது 
குறிஞ்சித் திணை - கபிலர் பாடியது 
முல்லைத் திணை - பேயனார் பாடியது 
பாலைத் திணை - ஓலாந்தையார் பாடியது 
இந்நூலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.

4. கலித்தொகை 
கலிப்பாவால் அமைந்த நூல் கலித்தொகை மட்டுமே. நல்லந்துவனார் ஐந்து புலவர்களல் பாடப்பட்ட150 அகத்துறைப் பாடல்களைத் தொகுத்து வழங்கினார். 
பாலை - 35 ; குறிஞ்சி - 29 ; மருதம் - 35 ; முல்லை - 17 ; நெய்தல் -33

5. அகநானூறு - அகம் + நானூறு 
400 அகத்துறை பாடல்களைத் தனியாகத் தொகுத்தனர். 
வீட்டு வாழ்க்கைப் பாடல்கள் - 13 அடி குறைந்த அளவிலும் 31 அடி விரிந்த நிலையிலும் பாடல்கள் உள்ளன. 
தொகுத்தவர் - உப்பூரிக் கிழார் மகனார் 
1 - 120: களிற்றியானை நிரை 
121 - 300: மணிமிடை பவளம் 
301 - 400: நித்திலக் கோடை

6. பதிற்றுப் பத்து - பத்து + பத்து என்பது பொருள் 
10 சேர அரசர்களைப் பற்றியும்பத்து பத்து பாடல்கள் பாடப்பற்ற நூல். 
இப்போது கிடைத்துள்ளது 80 பத்துக்களே. 
முதல் பத்தும் இருதி பத்தும் கிடைக்கவில்லை. 
தொகுத்தவர் பெயர் தெரியவில்லை.

7. புறநானூறு 
புறத்தினைப் பற்றி பேசும் 400 பாடல்கள். தமிழ் நாட்டு சமுதாய வாழ்க்கைப் பற்றி கூறும் நூல். 
கி.மூ. 3 முதல் கி.பி 3 ஆம் நூற்றாண்டு வரை தமிழக வரலாற்றைக் கூறும் நூல். மூவேந்தர்கள், குறுநில மன்னர்கள், புலவர்கள் இவர்கள் வாழ்க்கையை விளக்கும் நூல். 
வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்று வடித்துக் காட்டும் நூல். 
தமிழர்களின் பண்பாட்டுக் கருவூலம், வரலாற்றுப்பெட்டகம்.

8. பரிபாடல் 
4 வகைப் பாக்களால் பாடப் பெற்ற நூல். எட்டுத் தொகை நூல்களில் அகமும் புறமும் என இரு பொருள் பற்றியும் பாடப்பெற்ற நூல். 70 பாடல்கள் கொண்டது. கிடைத்திருப்பது 22 பாடல்களே. 
பதிப்பித்தவர் உ.வே.சாமிநாத ஐயர். 
 
 

பத்துப் பாட்டு 
பத்துப்பாட்டு - திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுபடை, சிறுபாண் ஆற்றுபடை, பெரும் பாணாற்றுபடை, மலைபடு கடாம், முல்லைப்பாட்டு, நெடுநல் வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மதுரைக் காஞ்சி
 

1. திருமுருகாற்றுப்படை 
முருகனிடம் வழிபடுத்துதல் என்பது பொருள் 
தமிழ்க் கடவுள் முருகன் 
பாடியவர் - நக்கீரர் 
317 அடிகளை உடையது 
ஆறு படைவீடுகளின் சிறப்பும் அவற்றில் நடைபெரும் செயல்களும் கூறப்பட்டுள்ளது. 
பாடல்களை படிக்க - (tamilvu.org)

2. பொருநர் ஆற்றுப்படை 
சோழன் பெருவளத்தானைப் பாடியுள்ள நூல். 
248 அடிகளைக் கொண்டது. 
பாடல்களை படிக்க - (tamilvu.org) 

3. சிறுபாண் ஆற்றுப்படை 
சிறிய யாழைக் கொண்டுப் பாடிய புலவனை வழி கூறி அனுப்புதல் 
ஓய்மான் நாட்டு நல்லிய கோடனை நல்லூர் நத்தத்தனார் பாடியது 
269 அடிகளைக் கொண்டது. 
பாடல்களை படிக்க - (tamilvu.org)

4. பெரும் பாணாற்றுப்படை 
பேரியாழைக் கொண்டு பாடியப் புலவனை வழிப்படுத்திய பாடல் 
500 அடிகளைக் கொண்டது. 
கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது. 
யாழின் வருணனை, ஐந்திணைகளின் வருணனை, மக்களின் இயல்பு, அரசனின் செங்கோல் முறை, 
வீர குடிமக்களின் இயல்பு , ஆயர்கள் வாழ்க்கை, அந்தணர் ஒழுக்கம் போல் பல செய்திகளை உள்ளடக்கியது 
பாடல்களை படிக்க - (tamilvu.org)

5. மலைபடு கடாம்  
மலையில் படுகின்ற ஓசை என்பது பொருள். மலைக்கு யானையை உவமையாக கூறி அதன் மதம் பொழியும் நிரை கடாத்தை ஓசை என்று ஆகு பெயரால் மலைபடு கடாம் என்று பெயர் தந்துள்ளனர. 
பாடல்களை படிக்க - (tamilvu.org)

6. முல்லைப்பாட்டு 
முல்லை நிலத்து ஒழுக்கத்தைப் பற்றிய பாடல்கள். இது அகப்பாடல். 
103 அடிகளை கொண்டது. 
பாடியவர் - காவிரிப் பூம்பட்டினத்து பொன் வணிகனார் மகன் நப்பூதனார். 
பாடல்களை படிக்க - (tamilvu.org)

7. நெடுநல் வாடை 
நீண்ட நல் வாடை என்பது பொருள். தெற்கிலிருந்து வீசும் காற்று தென்றல். கிழக்கிலிருந்து வருவது கொண்டல். மேற்கிலிருந்து வருவது கொடை. வடக்கிலிருந்து வருவது வாடை. 
188 அடிகளை உடையது. 
பாடியவர் - ங்க்கீரர். 
பாடல்களை படிக்க - (tamilvu.org)

8.குறிஞ்சிப் பாட்டு 
குறிஞ்சி நில ஒழுக்கம் பற்றிய பாடல்களை கொண்டது. 
261 அடிகளை உடையது. 
பாடியவர் - கபிலர். 
பாடல்களை படிக்க - (tamilvu.org)

9. பட்டினப்பாலை  
சொழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றி பாடப் பட்டது. 
301 அடிகளைக் கொண்டது. 
வஞ்சிப்பா - 163 
ஆசிரியப்பா - 138 
இயற்றியவர் - கடியலூர் உருத்திரங்கண்ணனார் 
பாடல்களை படிக்க - (tamilvu.org)

10. மதுரைக் காஞ்சி 
மதுரையில் தைலையாலங்காடை என்ற ஊரில் வெற்றி கொண்ட பாண்டியன் நெடுந்செழியனுக்கு நிலையாமை ஒழுக்கத்தை கூறிய பாடல். 
782 அடிகளை கொண்டது. 
பாடியவர் - மாங்குடி மருதனார். 
பாண்டியன் படையெடுப்பு - போர் நிகழ்ச்சிகள், வெற்றி, பாண்டிய நாட்டின் நிலங்களின் செய்திகள், மன்னனின் வளமிக்க ஆட்சி கூறப்பட்டுள்ளது. 
பாடல்களை படிக்க - (tamilvu.org) 
 

பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியார் உறையும் 
தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர், நிழற்படப்பதிப்பு 
 

 
Details also available at: chennailibrary.com/...